R scaled
உலகம்செய்திகள்

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு

Share

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளான பிரிஷ் யூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங்கே மீண்டும் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து, டெல்லியில் பல நாட்கள் போராட்டம் நடத்திய வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தன்னுடைய இத்தனை ஆண்டு கால கடின உழைப்பு அனைத்தையும் கைவிட்டு, ‘நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்’ என கண்ணீருடன் அறிவித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதே சமயம் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார்.

இவை இந்திய மல்யுத்த சங்கம் மற்றும் மத்திய பாஜக அரசு மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரிஷ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சங்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டதை மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....