tamilnid 13 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு

Share

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு

பண்டிகை காலத்தில் எரிபொருளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உடன்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகச்சங்கத்தின் இணைச்செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50 சதவீத எரிபொருள் கையிருப்பை பேனுமாறு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக அறிவுறுத்தியுள்ளார்.

லங்கா ஐஓசி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் தடையின்றிய மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்ந்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...