tamilni 393 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்

Share

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்

2023ஆம் ஆண்டை காட்டிலும் 2024ஆம் ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும். வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமையவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள். வரி தொடர்பில் அவர் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்துக்கும் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கி விட்டு வரி அதிகரிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு என்று மக்கள் மத்தியில் குறிப்பிடுகிறார்கள்.

வரி அதிகரிப்பை தவிர எவ்வித திட்டங்களையும் ஜனாதிபதி செயற்படுத்தவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆனால் வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள நடைமுறைக்கு சாத்தியமான செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை.

முறையற்ற வகையில் வற் வரி உட்பட சகல வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டை காட்டிலும் அடுத்த ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும்.

வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். மக்கள் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்கும்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களும் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

வரி கொள்கை அடுத்த ஆண்டு அரசியல் ரீதியிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...