tamilni 389 scaled
இலங்கைசெய்திகள்

டிரன் அலஸ்ஸூக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

Share

டிரன் அலஸ்ஸூக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைவஸ்துக்களுக்கு எதிரான யுக்திய என்ற செயற்பாடு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸூக்கு வெளிநாட்டு பாதாள உலக முக்கியஸ்தர் ஒருவரிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்தே, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸூக்கு இந்த அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

மாநாடு நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே, அமைச்சர் அலஸுக்கு அநாமதேய அழைப்பு வந்துள்ளது.

இதன்போது அமைச்சர், தமது தொலைபேசியின் ஒலியை வெளியில் கேட்குமாறு செய்து முழு உரையாடலையும் பதிவு செய்யுமாறு தமது ஊடக செயலாளரை பணித்துள்ளார்.

இதன்போது தொலைபேசியில் அழைத்தவர், அமைச்சரின் பாதுகாப்பிற்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“இன்னும் ஏழு பூரணை நாட்களுக்குள் கவனித்துக்கொள்கின்றேன்” என அவர் சபதம் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அலஸும், ‘இதை ஏழு பூரணை நாட்களில் அல்ல இரண்டு பூரணை நாட்களில் செய்து முடிப்பேன் என்றும் தேவையானதைச் செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...