tamilni 333 scaled
உலகம்செய்திகள்

கன மழைக்கு மொத்தமாக மூழ்கிய விமான நிலையம்… பெருவெள்ளத்தில் தப்பிய முதலைகளால் பீதியில் மக்கள்

Share

கன மழைக்கு மொத்தமாக மூழ்கிய விமான நிலையம்… பெருவெள்ளத்தில் தப்பிய முதலைகளால் பீதியில் மக்கள்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத பேய் மழையால் பெருவெள்ளம் எற்பட்டு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். வெப்பமண்டல சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை சில பகுதிகளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழையை சில நாட்களில் கொட்டித்தீர்த்துள்ளது.

இதனிடையே, கெய்ர்ன்ஸ் விமான நிலையம் பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கியுள்ளதை அடுத்து விமானங்கள் நீரில் மூழ்கின. நகர மத்தியில் முதலை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் உயிர் பயத்தில், படகுகளில் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுவரையில் உயிரிழப்பு அல்லது காணாமல் போனவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இன்னும் 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்புகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், மின்சாரம் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாதுகாப்பான குடிநீர் அளவு குறைந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குயின்ஸ்லாந்து முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவிக்கையில், இதுபோன்ற மிக மோசமான இயற்கை பேரிடரை தாம் இதுவரை எதிர்கொண்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், திங்கட்கிழமை முழுவதும் மழை தொடரும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செவ்வாய்கிழமையன்று மழை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆறுகள் இன்னும் அதன் மொத்த கொள்ளளவை எட்டவில்லை என்றும், ஆனால் அடுத்த பல நாட்கள் நீர் வரத்து அதிகரித்தே காணப்படும் என தெரிவித்துள்ளனர்.

மாகாண நிர்வாகம் இதுவரையான சேத மதிப்பு 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் என கணக்கிட்டுள்ளனர். பொதுவாக கிழக்கு அவுஸ்திரேலியா சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி அவுஸ்திரேலியா தற்போது El Nino வானிலை நிகழ்வை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....