tamilni 326 scaled
இலங்கைசெய்திகள்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.

அதன்படி, உரிய பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியாக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.

பல மதங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய,போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் நவம்பர் 29 அன்று நாட்டுக்கு திரும்பிய நிலையில் இரண்டு நாட்கள் வாக்குமூலங்களை வழங்கிய பின்னரே கைது செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் ஜெரோம் வந்த 48 மணி நேரத்திற்குள் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...