tamilni 292 scaled
இலங்கைசெய்திகள்

மூன்று நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு விஜயம்

Share

மூன்று நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு விஜயம்

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான் தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.

இலங்கை வந்துள்ள மூன்று நாடுகளின் தூதுவர்களும் நேற்று காலை நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தின் முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளை சந்தித்துள்ளனர்.

சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ் தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர்கள் 10 பேர்கள் கொண்ட குழுவினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன்போது நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளையும், தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ஆன்மீக சமயத்தலைவர் ரிசி தொண்டு ஞான சுவாமிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சமயரீதியான நல்லிணக்க விழிப்புணர்வுகள், சமயத்தலைவர்களினால் எதிர்நோக்கும் மக்கள் ரீதியான பிரச்சினைகள், அதன் ஊடாக அவர்கள் கிடைக்ககூடிய சாதகமான அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறக்கூடிய செயற்பாடுகள், இந்து சமய வளர்ச்சிக்கான அடிப்படைக்கு தேவையான விடயங்கள், கலாச்சார ரீதியாக எதிர்நோக்கும் விடயங்கள் பற்றி குறித்த சந்திப்பில் கலந்துறையாடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...