tamilni 258 scaled
இலங்கைசெய்திகள்

பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்

Share

பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினாலும், கேக் கிலோ ஒன்றின் விலை நூறு ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முட்டையின் விலை 60 ரூபாவாகவும், ஒரு கிலோ சீனி 305 ரூபாவாகவும், ஒரு கிலோ உப்பு 400 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமையே இந்த விலை உயர்விற்கு காரணம்.

குறிப்பாக சந்தையில் முட்டை மற்றும் சீனியின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் குறைந்த விலையில் கேக் கிடைக்கும் வாய்ப்பை மக்கள் இழக்க நேரிடும்.

கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலம் முடியும் வரை இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முட்டை மற்றும் சீனி முக்கியமாக பேக்கரி பொருட்களுக்கு தேவைப்படுவதுடன், மீன் ரொட்டி, முட்டை ரொட்டி, கட்லட், பஜ்ஜி போன்ற சிற்றுண்டிகளின் உற்பத்திக்கு வெங்காயம் இன்றியமையாதது. இந்த பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி உரிமையாளர்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...