gettyimages 1850614060 scaled
உலகம்செய்திகள்

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு

Share

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் இடம்பெற்றுவரும் நிலையில் காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று (12) வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உள்ள 193 உறுப்பினர்களில், குறித்த யோசனைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 153 உறுப்பு நாடுகள் காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் போர் நிறுத்தத்திற்கு10 நாடுகள் எதிராக வாக்களித்ததுடன் 23 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்கா, பரகுவே, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

அத்துடன் பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் க்ரீன் ஃபீல்ட், தற்போது ஏற்படும் எந்த போர் நிறுத்தமும் தற்காலிகமானது எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...