tamilni 224 scaled
இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் உத்தரவு

Share

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை இன்று உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பிரதிவாதி சமர்ப்பித்த ஆரம்ப ஆட்சேபனை மீதான உத்தரவுக்கு அமையவே நேற்று (12.12.2023) இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.

இதன்படி விமல் வீரவன்சவின் பிணைமுறிகள் நீதிமன்றில் முன்னிலையாகி உண்மைகளை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, மேற்படி மனுவை பிறப்பித்ததுடன், அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் அமைச்சராக இருந்த அவர் சொத்துக்கள் மற்றும் சம்பளத்தின் மூலம் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...

14 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ரூ. 1,945 இலட்சம் மீளப் பெற்றுக்கொடுப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம்...