3 8 scaled
உலகம்செய்திகள்

இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறுப்புத் தாக்குதல்: 14 வயது சிறுவன் கைது

Share

இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறுப்புத் தாக்குதல்: 14 வயது சிறுவன் கைது

இங்கிலாந்தில் கடந்த மாதம் சீக்கியர் ஒருவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 21ஆம் திகதி, இந்தர்ஜித் சிங் என்பவர் இங்கிலாந்தின் Slough என்னுமிடத்திலுள்ள பூங்கா ஒன்றின் வழியாக நடந்துசென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, சில பையன்கள் அவரை நெருங்கியிருக்கிறார்கள். ஒரு பையன் சிங்கின் தாடியைப் பிடித்து இழுக்க முயன்றிருக்கிறான். உடனே பையன்கள் அவரை சூழந்துகொண்டு அவரை மிதித்து தரையில் தள்ளியிருக்கிறார்கள்.

தாக்குதலில் சிங்குடைய விலா எலும்புகளில் மூன்று உடைந்ததுடன், அவரது கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது பையன் ஒருவன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான். தொடர்ந்து பொலிசார் அந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், வளர்ந்துவரும் இளைய தலைமுறையிடமும் இனவெறுப்பு வளர்ந்துவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...