tamilni 119 scaled
இலங்கைசெய்திகள்

பிரிவினைவாதத்தை தூண்டும் புலம்பெயர் அமைப்புகள்

Share

பிரிவினைவாதத்தை தூண்டும் புலம்பெயர் அமைப்புகள்

பிரிவினைவாதத்தை தூண்ட சில புலம்பெயர் அமைப்புகள் முயற்சிப்பதாக வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒரு சிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது.

இஸ்ரேல் – காசா போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் போரை விடுத்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே முழு உலகும் வலியுறுத்துகின்றது.நாங்களும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம்.

தமிழ் தரப்பு பிரதிநிதிகள் பிரிவினைவாதம் பற்றி பேசுகின்றார்கள் என்று நான் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.’புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்தில் ஒரு சிலரும் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகின்றார்கள்’ என்றே குறிப்பிட்டேன்.

பொருளாதார மீட்சி தொடர்பில் அண்மையில் நாங்கள் புலம்பெயர் அமைப்புக்களுடனும்,சர்வதேச சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.அப்போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் பிரிவினைவாதம் பற்றி பேசினார்.

சமஷ்டி பற்றி பேசுவது பிரச்சினையில்லை ஐக்கிய நாட்டுக்குள் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....