tamilni 116 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் இலங்கையரின் செயல்

Share

இந்தியாவில் இலங்கையரின் செயல்

ஒன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடலூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுநரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இலங்கையர் ஒருவரை இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருஞ்சிப்பாடியைச் சேர்ந்த 32 வயதான எஸ். சம்பத் என்ற முறைப்பாட்டாளருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒன்லைன் பகுதி நேர வேலை வழங்கப்படுவதாக குறுந்தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இணையம் மூலம் குறிப்பிட்ட பணிகளை முடிப்பதற்கு பணம் வழங்கப்படும் என அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய முதலீட்டில் இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பெருமளவு வருமானத்தை பெற முடியும் என சந்தேக நபர் உறுதியளித்துள்ளார்.

பின்னர், சம்பத் என்ற நபர் ஒரு பெரிய டெலிகிராம் குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைய வங்கிக் கணக்கில் 60 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பு செய்துள்ளார்.

இறுதியாக, பணத்தை மோசடி செய்தவர்களிடம் இழந்ததை அடுத்து, இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை நடத்தியது. இதன்போது குழு கடைசியாக கணக்கு வைத்திருப்பவருக்கு 6 லட்சம் பரிவர்த்தனை செய்தமை மற்றும் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்கு விவரங்களையும் பெற்றனர்.

வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் விபரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

குறித்த கணக்கு சென்னை அம்பத்தூரில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சல்மான் முகமது பாரூக் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இந்த ஒன்லைன் மோசடியின் தலைவன் சீனாவைச் சேர்ந்தவர் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் வைத்து சல்மானை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை கடலூருக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...