rtjy 58 scaled
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் வெளியான ஆய்வு அறிக்கை!

Share

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் வெளியான ஆய்வு அறிக்கை!

ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று கூறிய வெரைட்( Verite) ஆய்வு அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மேம்படுத்தலின் கீழ் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் தலையீடு செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இந்த நாட்டில் உள்ள 77 வீத முதியோர் ஏற்கவில்லை என்று வெரைட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம், தலையிடுவதற்கு இலங்கையின் சனத்தொகையில் 28 சதவீத மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும் அந்த நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாதிரி அளவு 1008 தனிநபர்களாவர். அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.0045 சதவீதத்தினர் மட்டுமே என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சேமசிங்கவின் கூற்றுப்படி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இலங்கை வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் 57.2 மில்லியன் வங்கிக் கணக்குகளையும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதிகளையும் பாதுகாக்கின்றது.

கடன் மறுசீரமைப்பு ஏற்படாதிருந்தால் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் செயல்முறையானது உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதன் காரணமாக ஓரளவு வெற்றியடைந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டுவதாக சேமசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் மேலும் கடனைத் திருப்பிச்செலுத்தும் காலத்தை நீடித்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை முதன்மையாக எதிர்பார்க்கின்றது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நீடிக்கப்பட்ட கடனின் இரண்டாம் தவணை தாமதமின்றி நிறைவேற்றுக் குழுவால் அங்கீகரிக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...