rtjy 58 scaled
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் வெளியான ஆய்வு அறிக்கை!

Share

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் வெளியான ஆய்வு அறிக்கை!

ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று கூறிய வெரைட்( Verite) ஆய்வு அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மேம்படுத்தலின் கீழ் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் தலையீடு செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இந்த நாட்டில் உள்ள 77 வீத முதியோர் ஏற்கவில்லை என்று வெரைட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம், தலையிடுவதற்கு இலங்கையின் சனத்தொகையில் 28 சதவீத மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும் அந்த நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாதிரி அளவு 1008 தனிநபர்களாவர். அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.0045 சதவீதத்தினர் மட்டுமே என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சேமசிங்கவின் கூற்றுப்படி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இலங்கை வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் 57.2 மில்லியன் வங்கிக் கணக்குகளையும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதிகளையும் பாதுகாக்கின்றது.

கடன் மறுசீரமைப்பு ஏற்படாதிருந்தால் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் செயல்முறையானது உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதன் காரணமாக ஓரளவு வெற்றியடைந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டுவதாக சேமசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் மேலும் கடனைத் திருப்பிச்செலுத்தும் காலத்தை நீடித்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை முதன்மையாக எதிர்பார்க்கின்றது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நீடிக்கப்பட்ட கடனின் இரண்டாம் தவணை தாமதமின்றி நிறைவேற்றுக் குழுவால் அங்கீகரிக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....