23 656f552addb01 md
உலகம்செய்திகள்

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Share

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

பிரித்தானிய கிராமம் ஒன்றில், நிறைமாத கர்ப்பிணி ஒருவரைக் கத்தியால் குத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வேல்ஸ் நாட்டிலுள்ள Aberfan என்னும் கிராமத்தில், ஒரு பெண் தன் பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக வந்துள்ளார். அவர் பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே வரவும், அங்கு நீண்ட நேரமாக அவரது வருகைக்காக காத்திருந்த ஒருவர், அந்தப் பெண்ணை கத்தியால் சரமாரியாக ஐந்துமுறை குத்தியுள்ளார்.

நேற்று காலை 9.10 மணியளவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்த நிலையில், மக்கள் ஓடிவந்ததால் கத்தியால் குத்தியவர் தப்பியோடியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்ட 29 வயது பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். அவரது பெயர் Andreea Pintilli. கிறிஸ்துமஸ் நேரத்தில் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்றாலும், அவர் குத்தப்பட்டதும் உடனடியாக ஓடிவந்தவர்களில் ஒருவர் Katie Roberts (31) என்னும் செவிலியர் என்பதால், Andreeaவின் உயிர் காப்பாற்றப்பட்டதாக கருதப்படுகிறது.

ஏழு மணி நேரத்திற்குப் பின், வீடு ஒன்றில் பதுங்கியிருந்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். 28 வயதான அவர், Andreeaவுக்கு அறிமுகமானவர்தான் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

இந்த சம்பவம் காலை நேரத்தில் நிகழ்ந்ததால், பள்ளிக்கு வந்த பிள்ளைகளும், பிள்ளைகளை பள்ளியில் விடவந்த பெற்றோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

என்றாலும், கத்தியால் குத்தப்பட்ட Andreeaவுக்கோ, அவரது வயிற்றிலிருந்த குழந்தைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தி

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...