tamilni 105 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இராணுவத்தளபதிக்கு புதுடெல்லியில் கம்பள வரவேற்பு

Share

இலங்கையின் இராணுவத்தளபதிக்கு புதுடெல்லியில் கம்பள வரவேற்பு

இலங்கையின் இராணுவத்தளபதி புதுடெல்லியில் தனது இந்திய இராணுவத்தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் அழைப்பின் பேரில் நேற்று புதுடெல்லியில் உள்ள இந்திய இராணுவத் தலைமையகத்துக்கு இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே சென்றபோது சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இலங்கை இராணுவத்தளபதி தேசிய போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவப்படையணியினர், இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேக்கு கௌரவ மரியாதை அணிவித்தனர்.

இந்நிலையில் இந்திய இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில், இலங்கையின் இராணுவத்தளபதி, இந்திய இராணுவத்தின் இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுடன் முறையான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இரு படைகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

இலங்கை இராணுவத்தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹானையும் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்புகள் மற்றும் இருதரப்பு விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட இலக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...