tamilni 53 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்ட பெருந்தலைவர் என மொட்டுக்கட்சி முக்கியஸ்தர் புகழாரம்

Share

நாட்டை மீட்ட பெருந்தலைவர் என மொட்டுக்கட்சி முக்கியஸ்தர் புகழாரம்

எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியை தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர்.

அந்தச் சிலரின் சதித் திட்டம் வெற்றியளிக்காது. ஏனெனில் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் உள்ளார்கள்.

வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அரசும் கவிழும். அந்த நிலைமை ஏற்பட மொட்டுக் கட்சி இடமளிக்காது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தப் பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கின்றோம்.

அவர் ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்க மறுத்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை படுமோசமடைந்திருக்கும். அவரை மாதிரி சிறந்த ஒரு தலைவர் இன்று இல்லை என்பதை நான் வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 2 7
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய...

1616764671 preschool 2
செய்திகள்இலங்கை

பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்!

நாட்டில் நிலவும் அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை முதல் (நவம்பர் 28)...

images 8 1
செய்திகள்இலங்கை

கனமழையால் 600,000 ஏக்கர் பயிர்கள் நாசம்: பண்டிகைக் காலத்தில் காய்கறி விலைகள் உயரலாம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

இலங்கை முழுவதும் பெய்த கனமழை காரணமாக சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள்...

images 7 1
இலங்கைசெய்திகள்

பதுளை, கண்டி மண்சரிவுகள்: 24க்கும் மேற்பட்டோர் பலி; 170 வீடுகள் முழுமையாகச் சேதம் – பேரிடர் மையம்!

நாட்டில் தற்போது நிலவும் கனமழை காரணமாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகள்...