rtjy 23 scaled
உலகம்செய்திகள்

மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவிப்பு

Share

மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவிப்பு

மலேசியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மலேசியா குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.

மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை நிரப்பி இருக்க வேண்டும் என மலேசிய குடிவரவுத்துறை முகப்புத்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(01.12.2023) பதிவிட்டுள்ளது.

மலேசிய நிரந்தர குடிவாசிகள், மலேசிய தானியக்க குடிவரவு முறை அட்டைதாரர்கள் மற்றும் குடிவரவு நடைமுறையை நிறைவேற்ற தேவையில்லாத சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இடைவழிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக குடிவரவு துறையின் மலேசிய மின்னிலக்க வருகை அட்டை பிரிவின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகள் தங்கள் பெயர், நாட்டுரிமை, கடவுச்சீட்டு விவரம் போன்ற அடிப்படை விவரங்களை மின்னிலக்க இணையப்பக்கத்தில் மலேசியா வருவதற்கு 3 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும் என அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஜனவரியில், ஜோகூர் பாருவில் இருக்கும் இரண்டு தரைவழி சோதனைச் சாவடிகளிலும் சிங்கப்பூர் வாசிகள் இந்த மின் நுழைவு வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு மலேசியாவின் மின்னிலக்க வருகையை அட்டை முன்னரே நிரப்பி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

Share
தொடர்புடையது
07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...

06 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல்...

05 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை: சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவுப் பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று...

04 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிரடி உயர்வு: நள்ளிரவு முதல் புதிய விலை பட்டியல் அமுல்!

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின்...