rtjy 22 scaled
உலகம்செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும்

Share

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும்

இஸ்ரேல், காசாவில் இன அழிப்பை நடத்தி வருவதாகவும், இதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும் எனவும் துருக்கி ஜனாதிபதி காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் போர், 2 மாதங்களை எட்டவுள்ளது.

இதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 5,000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலை கண்டிக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்களையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன், இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகுவின் செயல், அவரது அரசுக்கு மட்டுமின்றி அவரை ஆதரிக்கும் நாடுகளுக்கும் கரும் புள்ளியாக மாறி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்களின் இந்த மௌனத்திற்கு வரும் காலங்களில் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுமார் 2,000க்கும் மேற்பட்ட துருக்கி வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருப்பதாகவும், காசா பகுதியில் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆரம்பம் முதலே துருக்கி ஜனாதிபதி இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக தற்போது துருக்கியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...