tamilni 426 scaled
உலகம்செய்திகள்

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

Share

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இரு நாடுகளும் தங்கள் பிணைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறி கொண்டுள்ளனர்.

இதுவரை 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர், அதே சமயம் 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

அத்துடன் இந்த போர் நிறுத்தத்தின் மூலம் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மேலும் 2 நாட்களுக்கு அது நீடிக்கப்பட்டது.

ஹமாஸ் படையினருடன் நெருக்கமான ஆதாரத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் வழங்கிய தகவலில், அதே பழைய நிபந்தனைகளுடன் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பழைய நிபந்தனைகளின் படி, இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மாற்றாக, நாள் ஒன்றுக்கு 10 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, இஸ்ரேலி விமானங்கள், ட்ரோன்கள் காசா மேற்பரப்பில் பறக்காமல் இருப்பது ஆகியவை உள்ளடங்கும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும், ஆனால் போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...