tamilni 426 scaled
உலகம்செய்திகள்

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

Share

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இரு நாடுகளும் தங்கள் பிணைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறி கொண்டுள்ளனர்.

இதுவரை 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர், அதே சமயம் 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

அத்துடன் இந்த போர் நிறுத்தத்தின் மூலம் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மேலும் 2 நாட்களுக்கு அது நீடிக்கப்பட்டது.

ஹமாஸ் படையினருடன் நெருக்கமான ஆதாரத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் வழங்கிய தகவலில், அதே பழைய நிபந்தனைகளுடன் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பழைய நிபந்தனைகளின் படி, இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மாற்றாக, நாள் ஒன்றுக்கு 10 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, இஸ்ரேலி விமானங்கள், ட்ரோன்கள் காசா மேற்பரப்பில் பறக்காமல் இருப்பது ஆகியவை உள்ளடங்கும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும், ஆனால் போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....