1 1 14 scaled
உலகம்செய்திகள்

பிணைக் கைதியான 10 மாத குழந்தை: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்த குடும்பம்

Share

பிணைக் கைதியான 10 மாத குழந்தை: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்த குடும்பம்

காசா மீதான இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலின் போது 10 மாத குழந்தை Kfir உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் 240க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக காசா பகுதிக்கு கடத்தி சென்றனர்.

இதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை மீட்கவும், ஹமாஸ் படையினரை ஒழித்து கெட்டும் நோக்கியிலும், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை அறிவித்து சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது.

இஸ்ரேலின் இந்த ஏவுகணை தாக்குதல் காசா பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் படையினர் அறிவித்து இருந்தனர், ஆனால் யார் யார் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அப்போது ஹமாஸ் அறிவிக்கவில்லை.

தற்போது இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினரும் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இதுவரை கிட்டத்தட்ட 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர், 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது அப்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இஸ்ரேலிய Bibas குடும்பம் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு தெரிவித்துள்ளது.

அல் கஸ்ஸாம் படைகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், போர் நிறுத்தத்திற்கு முன்னதாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 10 மாத குழந்தை Kfir, 4 வயது சகோதரர் Ariel மற்றும் அவர்களது தாய் Shiri என Bibas குடும்பத்தில் உள்ள 3 பேர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

ஆனால் குழுக்களின் இந்த இறப்பு கோரல்களை ஸ்கை நியூஸ் தொலைகாட்சி சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...