tamilni 435 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமர் மீது பகிரங்க குற்றச்சாட்டு

Share

பிரதமர் மீது பகிரங்க குற்றச்சாட்டு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பிரதமரின் பெயரை கூறி பணம் பறிக்கும் குழு செயற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,டென்மார்க்கில் வேலை வாங்கி தருவதாக சொல்லி இந்த நாட்டு இளைஞர்களிடம் தலா 6 லட்சம் ரூபாய் வசூலிக்கும் செயற்பாட்டில் பிரதமரின் ஒருங்கிணைப்பு அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட நபரும் குழுவும் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து முறையான விசாரணை வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன,“இந்த கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் கேட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை. மேலும் எனது நிறுவனம் இதில் ஈடுபடவில்லை.

இந்த விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நம் நாட்டில் பல்வேறு நபர்களின் பெயர்களை வைத்து இவ்வாறு கடத்தல் நடக்கிறது. இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...