4 19 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி: தந்தை கூறிய அந்த வார்த்தை

Share

ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி: தந்தை கூறிய அந்த வார்த்தை

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் படைகளின் பிடியிலிருந்து 50 நாட்களுக்கு பின்னர் 9 வயது அயர்லாந்து சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து – இஸ்ரேலிய குடிமகளான Emily Hand அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பிடியில் சிக்கினார். இஸ்ரேல் எல்லையில் இருந்து காஸாவுக்கு பணயக்கைதியாக கொண்டு செல்லப்பட்ட 240 பேர்களில் சிறுமி Emily Hand-ம் ஒருவர்.

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறைந்தது 30 குழந்தைகளில் இவரும் ஒருவர்.

இஸ்ரேல் – ஹமாஸ் படைகள் இடையிலான போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக தனது மகள் விடுவிக்கப்பட மாட்டார் என்ற அச்சத்தைப் பற்றி அவரது தந்தை முன்பு பேசியிருந்தார்.

எமிலியின் நீலக் கண்கள் என் கண்களைப் பார்ப்பதை நான் பார்க்கும் வரை, நான் எதையும் நம்பப் போவதில்லை என 63 வயதான தாமஸ் ஹண்ட் கண்கலங்கியிருந்தார்.

தற்போது போர் நிறுத்தம் தொடங்கிய இரண்டாவது நாளில் சிறுமி Emily Hand விடுவிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...