rtjyf 2 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவதானம்

Share

இலங்கையின் தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவதானம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் என்ற பொதுமைப்படுத்தப்பட்ட விருப்பத்தேர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ள தனது கடமைகளில் இருந்து இலங்கை மிகவும் கீழ்நிலையில் உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2019 முதல் இலங்கையின் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சுருங்குகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன, இது அவநம்பிக்கையான பொருளாதார காலங்களில் முக்கிய வருமானத்தை இலங்கைக்கு வழங்கி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விருப்பத்தேர்வுகள் பிளஸ் திட்டமே இதற்கு முக்கிய காரணமாகும். எனினும் ஐரோப்பிய ஒன்றியம், தமது அண்மையில் புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கை அரசாங்கம் இந்த இலக்கை விட மிகவும் பின்னோக்கியே இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் மனித உரிமைகளுக்கான இரண்டு பிரகாசமான புள்ளிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று கூடல் மற்றும் சிவில் சமூகத்தின் எதிர்ப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது முதல் பாரிய அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது.

இது, இலங்கையின் பொருளாதார, ஆளுகை மற்றும் மனித உரிமைகள் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு உதவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கு இது சவாலான விடயமாகும்.

அத்துடன் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கம் தொடர்பில் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முக்கிய உறுதிமொழியை – அரசாங்கம் இன்னும் ரத்து செய்யவில்லை என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கு பதிலாக, அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முன்மொழிந்துள்ளபோதும், இது உரிமைகள் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...