tamilni 307 scaled
உலகம்செய்திகள்

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல்

Share

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல்

இஸ்ரேல் காசா போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக, பிரான்ஸ் தனது Dixmude என்னும் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்ப தயாராகி வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Dixmude கப்பல், வார துவக்கத்தில் புறப்பட்டு, சில நாட்களில் எகிப்தை சென்றடையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், வார துவக்கத்தில், 10 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம் ஒன்றையும் காசாவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 23 மற்றும் 30 ஆம் திகதிகளில், ஐரோப்பிய விமானங்களில் மருத்துவ உபகரணங்களை அனுப்பும் ஐரோப்பிய முயற்சியிலும் பிரான்ஸ் தனது பங்களிப்பைச் செய்யும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்சுக்கே கொண்டுவரப்பட இருக்கும் குழந்தைகள்
மேலும், காசா பகுதியில் உள்ள, அவசர சிகிச்சை தேவைப்படும் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை வெளியேற்றி மருத்துவமனைகளுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல் | France To Send Warship To Gaza

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....