tamilni 263 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையை நிலையானதாக்க விசேட கூட்டத்தொடர்

Share

எரிபொருள் விலையை நிலையானதாக்க விசேட கூட்டத்தொடர்

வருங்கால தேவையின் போக்கிற்கு ஏற்ப, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பரிசீலித்து வருவதாக ஒபெக் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஒபெக் கூட்டத்தொடர் நவம்பர் 26ம் திகதி நடைபெறும் என்றும், குறித்த கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் , எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருப்பதற்காக எதிர்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இறுதியாக இம்மாதம் முதலாம் திகதி(01.11.2023) எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 423 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒட்டோ டீசல் 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் ​அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 249 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...