rtjy 167 scaled
இலங்கைஏனையவைசெய்திகள்

பிரியாணி பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு எச்சரிக்கை

Share

பிரியாணி பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு எச்சரிக்கை

பிரியாணி, ஃபிரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நிறமிகள் சரியான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சுகாதார அமைச்சு ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த வேண்டும் என சங்கத்தின் பொருளாளர் ரோஷன குமார தெரிவித்துள்ளார்.

உணவுச் சட்டம் சந்தையில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகளின் அளவைக் கட்டுப்படுத்தும் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.

இருப்பினும், ரோஸ்ட் கோழி இறைச்சி, பிரியாணி மற்றும் ஃபிரைட் ரைஸ் வகைகள் தயாரிப்பதில் இந்த நிறமூட்டிகளை பயன்படுத்துவது உணவுக் கடைகளில் காணப்படுகிறது.

இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தனவிடம் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் தேவையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் குறித்து கேட்டபோது, தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....