1 23 scaled
உலகம்செய்திகள்

ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை

Share

ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் பாலஸ்தீனத்தின் காசா நகரம் முற்றிலுமாக சிதைந்துள்ளது.

காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் இந்த போர் நடவடிக்கையில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனால் காசாவில் உள்கட்டமைப்பு வசதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதால் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தீவிர சண்டையின் காரணமாக ஏற்பட்ட மின்தடை, மருத்துவ நுகர்பொருள், ஆக்ஸிஜன், உணவு, மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் பற்றாக்குறையால் காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையை தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் சேவைகள் நிறுத்தப்பட்டதாக செவ்வாய்கிழமை மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள 30 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் ஒன்றில் மட்டுமே மருத்துவ வசதிகளை நோயாளிகள் பெற முடியும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் குறைந்தது 500 நோயாளிகள் தங்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...