tamilni 191 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரான்ஸில் இலங்கையர் கைது

Share

பிரான்ஸில் இலங்கையர் கைது

பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நிலையில், எல்லையோர பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாகனத்திற்குள் 280 லிட்டர் கொள்ளளவு கொண்ட 57 மதுபானங்களை வைத்திருந்தாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மதுபானங்களின் பெறுமதி 3,500 யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸிலுள்ள வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை கொண்டு வந்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்க பிரிவினால் இலங்கையருக்கு எதிராக 6700 யூரோ அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...