4 7 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண்ணை தீவிரமாகத் தேடும் லண்டன் பொலிசார்

Share

பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண்ணை தீவிரமாகத் தேடும் லண்டன் பொலிசார்

லண்டனில் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பில் யூத எதிர்ப்பு பதாகை ஒன்றை ஏந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதுவே, அவரை பொலிஸ் தேடுவதற்கான காரணமாக தெரிவிக்கின்றனர்.

அந்தப் பெண் ஏந்தியிருந்த பதாகையில் ஜனாதிபதி ஜோ பைடனை பிசாசாக சித்தரிக்கப்பட்டிருந்தது. தலையில் கொம்புகளுடனும் கூரான பற்களுடனும் ஜோ பைடன் அந்த பதாகையில் காணப்பட்டார்.

அத்துடன், உலகின் அனைத்து தீமைகளுக்கும் காரணமானவர், மூளையாக செயல்படுபவர் எனவும் எழுதப்பட்டிருந்தது. குறித்த பெண்ணை எதிர்கொண்ட இன்னொரு பெண், இப்படியான செயல்களுக்கு எதிராக ஏன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், கோபத்தால் உடல் நடுங்குகிறது எனவும் அப்படியான செயலை தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் அந்த பெண் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணை தீவிரமாக தேடிவருவதாக பொலிஸ் தரப்பு பதிலளித்துள்ளது. அடையாளம் காணப்பட்டதும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...