rtjy 117 scaled
இலங்கைசெய்திகள்

காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி

Share

காஸா போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி

காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் சேமிப்பதற்கும் போதிய நிதியின்மை மற்றும் எரிபொருளை சேமிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. நாட்டில் 30 நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்கும் முறைக்கு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​எண்ணெய் நிறுவனம் 30 நாள் எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

போதிய நிதி மற்றும் சேமிப்பிடம் இல்லாத காரணத்தால் எதிர்காலத்தில் இருப்பு வைப்பது சிரமமான போதிலும், அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை சமாளிக்கலாம் என அமைச்சின் செயலாளர் கோப் குழுவிடம் இந்த வாரம் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், திருகோணமலையில் உள்ள 24 எண்ணெய் தாங்கிகளில் 12 தரம் உயர்த்தி சேமிப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது 60 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல், 40 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல், 3500 தொன் ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் 20 ஆயிரம் மெற்றிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாக எரிபொருள் பங்கு மீளாய்வுக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...