rtjy 94 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பல முறைகேடுகள்!

Share

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பல முறைகேடுகள்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில்,பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது.

அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவும், பல நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்காக கோப் குழு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர் சாலிய விக்ரமசூரிய உட்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அவர்களுடனான கூட்டத்தின்போது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான, கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயல்திறன் ஆகியவை ஆராயப்பட்டன.

இதன்போது கோப் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர், நாட்டில் அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்த, சேமிப்புக் கிடங்குகளில் 60,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 45,000 மெட்ரிக் டன் பெட்ரோலைப் பராமரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...