tamilni 105 scaled
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பிரதி சபாநாயகர் அறிவிப்பு

Share

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பிரதி சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படாத உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசமைப்புக்கு முரணானதா அல்லது முரணற்றதா என்று ஆராயும் அதிகாரம் இல்லாத காரணத்தால் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களின் விசாரணைகளை நிறைவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்த விடயத்தை அஜித் ராஜபக்ச சபைக்கு அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 2023.10.03 ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை.

அரசமைப்பின் 121 (3) அத்தியாயத்தின் பிரகாரம் இந்தச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படாத ஒரு சட்டமூலத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை.

இதன் காரணமாக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகளின் விசாரணைகளை நிறைவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...