tamilni 65 scaled
இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

Share

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இம்மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தாலும், நடைமுறையில் இருக்கும் விலையிலேயே இம்மாதமும் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாடிக்கையாளர்கள் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 3,985 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாவிற்கும் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம் என அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நவம்பர் மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைககு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,12 கிலோ கிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 3,565 ரூபாவாகும்.

மேலும், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 1,431 ரூபா அறிவிக்கப்பட்டுள்து.

அத்துடன், 02 கிலோகிராம் எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 668 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...