7 3 scaled
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளை நரகத்திற்கு அனுப்பிவிட்டோம்! பாகிஸ்தான் இராணுவம் பரபரப்பு அறிக்கை

Share

பயங்கரவாதிகளை நரகத்திற்கு அனுப்பிவிட்டோம்! பாகிஸ்தான் இராணுவம் பரபரப்பு அறிக்கை

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்தின் மீது அதிக ஆயுதம் ஏந்திய 9 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அதற்கு இராணுவத்தினர் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

அத்துடன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பயன்படுத்தப்படாமல் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களில் குறைந்தது 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சில மணிநேரங்களுக்கு பிறகு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், TTPயின் (தெஹ்ரீக்-இ-தலிபான்) துணை அமைப்பாக புதிதாக தோன்றியுள்ள TJP என்ற அமைப்பு விமானப்படை தளம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இடைக்கால பிரதமரான அன்வாருல் ஹக் கக்கர், ‘எங்கள் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த முயற்சியும் அசைக்க முடியாத எதிர்ப்பை சந்திக்கும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...