tamilni 32 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 31 திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 199 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

மே மாதத்தை தவிர ஏனைய அனைத்து மாதங்களிலும் இந்த வருடம் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை 159 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதற்கமைவாக கடந்த மாதம் இந்தியாவிலிருந்து 28,222 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,629 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,454 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,548 சுற்றுலாப் பயணிகள் மற்றும் சீனாவிலிருந்து 6,211 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, மாலைத்தீவு, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 25 ஆயிரத்து 455 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...