4 1 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் வாக்னர் கூலிப்படை: பிரிகோஜின் மகன் தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

Share

மீண்டும் வாக்னர் கூலிப்படை: பிரிகோஜின் மகன் தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

ரஷ்ய தேசிய காவலர் படையின் ஒற்றை அங்கமாக தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மகன் பாவெல் பிரிகோஜின் தலைமையில் வாக்னர் கூலிப்படை ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலில் ரஷ்யாவிற்கு சார்பாக வாக்னர் கூலிப்படை போரில் களமிறங்கியது.

ஆனால் ரஷ்ய ராணுவ படைக்கும், வாக்னர் கூலிப்படைக்கும் ஏற்பட்ட அறிப்படாத முரண்பாடுகளை தொடர்ந்து, வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தனது படைகளை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்து அழைத்து சென்றார்.

இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுன், வாக்னர் கூலிப்படை கலைக்கப்பட்டது, அதன் வீரர்கள் பெலாரஸ் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.

அத்துடன் எவ்ஜெனி பிரிகோஜன் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் மர்மமான விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினின் மகன் பாவெல் பிரிகோஜின் தலைமையில் வாக்னர் கூலிப்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மீண்டும் தொடங்கி இருக்கலாம் என அறிக்கைகள் வெளியாகி வருகிறது.

அத்துடன் இவை ரஷ்ய தேசிய காவலர் படையின்(Rosgvardiya) ஒற்றை அங்கமாக உருவாக்கப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் உக்ரைனின் தேசிய எதிர்ப்பு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ரஷ்யாவின் தென் மேற்கு நகரமான வோரோனேஜில் வாக்னர் உறுப்பினர்கள் உட்பட 10000 பேருக்கான முகாம்களை ரஷ்ய தேசிய காவலர் படை (Rosgvardiya) அமைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இவை உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாசகரமான செயல்களை செய்வதற்காக திட்டமிட்டு முகாமிட்டு இருப்பதாகவும் உக்ரைன் தேசிய எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...