1 1 1 scaled
உலகம்செய்திகள்

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

Share

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரினால் 7000 வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற முடியாமல் காசா பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையிலான போர் நடவடிக்கையானது 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேல் ராணுவத்தினர் தரை, கடல், வான் என மும்முனை தாக்குதலை பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 7000 குடிமக்கள் பாலஸ்தீனத்தின் காசாவில் சிக்கித் தவிப்பதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

எகிப்து வெளியுறவு அமைச்சகத்தை சுட்டிக் காட்டி DPA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், 60 நாடுகளை சேர்ந்த சுமார் 7000 பொதுமக்கள் காசாவில் இருந்து வெளியேறும் வாய்ப்பிற்காக காத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 360 வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த 81 பாலஸ்தீனியர்கள் காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்கு வந்துள்ளார்கள் என CNN தெரிவித்துள்ளது.

இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜோர்டான், சவுதி அரேபியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் எகிப்துக்கு வந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...