7 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

Share

பிரான்சில் ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

பிரான்சில் கடந்த மாதம் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிறகு, நாடு தீவிர பயங்கரவாத எதிர்ப்பு எச்சரிக்கையில் இருக்கும் நிலையில், பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, பாரீஸ் ரயில் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக, ரயில் நிறுத்தப்பட, ஆயுதங்களுடன் குவிந்த பொலிசார் பயணிகளை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.

அந்தப் பெண்ணை எச்சரித்தும் அவர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாகவும் தெரிவித்த பொலிசார், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில், அந்தப் பெண் மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பொலிசார் சோதனையிட்டபோது, அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பெண், 2021இல் இதேபோல் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு, தனது மன நல பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே பெண்ணாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

Share
தொடர்புடையது
image 1000x630 9
செய்திகள்இலங்கை

அம்பாறையில் முட்டை விலை குறைவு: வெள்ளை முட்டை ரூ.25-க்கு விற்பனை

அம்பாறை மாவட்டத்தில் தற்போது வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று...

image 1000x630 8
செய்திகள்இலங்கை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...

image 1000x630 7
செய்திகள்இந்தியாஇலங்கை

ஒத்துழைப்பு முக்கியம்’ – இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி பதிவு

இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது...

image 1000x630 5
செய்திகள்உலகம்

பாடகர் ஜூபின் கார்க் மரணம்: எந்த சந்தேகமும் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிவிப்பு

பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில்...