2 22 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம்

Share

பிரான்சில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள 20 யூத பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று, வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை, பள்ளிகள் திறந்த நிலையில், பாரீஸில் உள்ள 20 யூத பள்ளிகளில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததைத் தொடர்ந்து, பொலிசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அந்த பள்ளிகளில் சோதனை மேற்கொண்டார்கள்.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். தங்கள் பிள்ளைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், எந்த பள்ளியிலும் இதுவரை வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொலிசார் தொடர்ந்து சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....