1 1 1 scaled
உலகம்செய்திகள்

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேலிய பிரதமர்!

Share

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேலிய பிரதமர்!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கடந்த 7ம் திகதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் வழங்கவில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.

இஸ்ரேல் நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து சண்டை போட்டு வரும் ராணுவத்தினர் குறித்து எதிர்மறையாக பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் இதற்கு வலுவான கண்டங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவிற்கு பிரதமர் நெதன்யாகு வருத்தம் தெரிவித்து இருப்பதுடன், அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.

மேலும் மன்னிப்பு கேட்டு வெளியிட்டுள்ள பதிவில், நான் தவறு செய்து விட்டேன், நான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், நமது நாட்டின் ராணுவத்திற்கு எப்போதும் முழு ஆதரவு வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...