rtjy 340 scaled
இலங்கைசெய்திகள்

போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்

Share

சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(30.10.2023) நண்பகல் 12 மணியளவில் இடம்பெறும் என அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பள அதிகரிப்பை கோரியே நாடளாவிய ரீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என அந்த சங்கங்களின் இணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவை மற்றும் மாகாண அரச சேவை என பல சங்கங்களின் அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...