6 12 scaled
உலகம்செய்திகள்

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது…

Share

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கினாலும் இவர்களுக்கு விசா கிடையாது…

இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்கும் பணியை மீண்டும் துவங்கினாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்திருந்தது.

இந்நிலையில், நேற்று முதல், இந்தியா மீண்டும் கனேடியர்களுக்கு விசா வழங்கத் துவங்கியுள்ளது. கனேடிய தலைநகர் Ottawaவிலுள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதனால், இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், கனேடியர்களில் சில தரப்பினருக்கு மட்டுமே இப்போதைக்கு விசா வழங்கப்பட உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதாவது, கனடாவிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான விசா, வர்த்தகம், மருத்துவம், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான விசா, ஆகிய விசாக்கள் வழங்கும் பணி மட்டும் நேற்று முதல் துவங்கியுள்ளது.

ஆனால், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருவோர், மாணவர்களுக்கான விசா, பணி, மற்றும் சினிமா படப்பிடிப்புக்காக வழங்கப்படும் விசா, ஆகியவை வழங்கும் பணி இப்போதைக்கு துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...