3 1 1 scaled
உலகம்செய்திகள்

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

Share

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகி வரும் நிலையில், தற்போது ஈரானின் தரைப்படை இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 7,000 கடந்துள்ளது.

இந்த நிலையில், காஸா மீதான போர் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், அதை மூன்னெடுத்து நடத்தும் அமெரிக்கா அந்த தீயில் இருந்து தப்ப முடியாது என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது.

தற்போது தரைப்படையை தயார் படுத்தும் நோக்கில், இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறக்கப்பட்டுள்ளது. தரைப்படையுடன் 200 ஹெலிகொப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காஸா மீது தரைவழித் தாக்குதலை முன்னெடுத்தால், லெபனான் மற்றும் ஈரான் போரில் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.

மேலும், ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குறிப்பிட்டே, தரைப்படையின் பயிற்சியை முன்னெடுத்துள்ளது. ஈரானின் 7 மாகாணங்களில் இருந்தும் துருப்புகளும் தளவாடங்களும் பயிற்சிக்கு என திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் தற்போதைய போக்கு கண்மூடித்தனமானது என உணர்ந்து கொண்ட ஜோ பைடன், தற்போது பாலஸ்தீன மக்களின் உயிர் முக்கியம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....