1 15 scaled
உலகம்செய்திகள்

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

Share

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.

இவர், கடந்த 2000 -ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, இவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு பொலிசார் ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்ததையடுத்து, இந்த வழக்கு திருச்சி 2 -வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பின்பு, கைதான ஆனந்த் ஜாமினில் வெளிவந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்ததும் அவரை காணவில்லை.

அதாவது, 2004 பிப்ரவரி 6 -ம் திகதி முதல் ஆனந்த்தை காணவில்லை. இந்நிலையில், ஆனந்த் தொடர்பான வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், 19 ஆண்டுகள் தலைமறைவாகி இருக்கும் ஆனந்ததை மீண்டும் சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீட்டுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...