3 12 scaled
உலகம்செய்திகள்

இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இது மட்டும் குறையவில்லை…

Share

இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இது மட்டும் குறையவில்லை…

இந்தியா கனடா தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டாலும், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் இந்தியர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

கனேடியர் ஒருவர் கனடா மண்ணில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக செப்டம்பரில் கனேடிய பிரதமர் குற்றம் சாட்ட, இரு நாடுகளின் தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால், அதே செப்டம்பரில், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு, அதிகமாக இருந்ததாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தரவுகள் தெரிவித்துள்ளன.

பல்வேறு வழிகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 8,076 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 3,059 பேர், அல்லது 38% பேர், கனடா அமெரிக்க எல்லையில் கைது செய்யப்பட்டவர்கள்.

விடயம் என்னவென்றால், இதுவரை இப்படி அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையிலேயே, இதுதான் மிக அதிகமாகும்.

கனடாவில் குடியமர்ந்துள்ள பல இந்திய புலம்பெயர்வோர், குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய காத்திருந்திருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 2,327 சட்டவிரோத புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் கடத்தப்படும் முயற்சியின்போது பிடிபட்டுள்ளார்கள்.

செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 3,059ஆக உயர்ந்துள்ளது. அப்படி சிக்கியவர்களில், பெற்றோர் இல்லாமல் தனியாக வந்த பிள்ளைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...