rtjy 298 scaled
இலங்கைசெய்திகள்

ஜேர்மன் கடற்பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்து

Share

ஜேர்மன் கடற்பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்து

ஜேர்மனிக்கு அருகில், வட கடல் பகுதியில், இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு கப்பல் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“பொலேசி” மற்றும் “வெரிட்டி” என்னும் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், “வெரிட்டி” கப்பல் மூழ்கியிருக்கலாம் என ஜேர்மன் தரப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய சரக்குக் கப்பலான “வெரிட்டி” , ஜேர்மனியின் பிரேமன் என்னுமிடத்திலிருந்து, இங்கிலாந்திலுள்ள இமிங்ஹம் துறைமுக நகரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே “பொலேசி” என்னும் பஹாமாஸ் நாட்டுக் கப்பல், ஜேர்மனியின் ஹாம்பர்கிலிருந்து, ஸ்பெயினிலுள்ள லா- கொருணா துறைமுகம் நோக்கி பயணித்துள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் மாத்திரம் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், காணாமல் போன ஏனையவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், “பொலேசி” கப்பல், 22 பணியாளர்களுடன் கடலில் மிதந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...