tamilni 297 scaled
இலங்கைசெய்திகள்

நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு

Share

நெல் கையிருப்பில் 10 கோடி ரூபா இழப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் பல பருவங்களில் அவ்வப்போது கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊழியர்கள் குழுவொன்று விவசாய அமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களின் சில அதிகாரிகளும் அரிசி இருப்பு காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ உள்ளிட்ட 05 களஞ்சியசாலைகளில் கொள்வனவு செய்யப்பட்ட அரிசி கையிருப்பு காணாமல் போயுள்ளதாகவும், அந்த கையிருப்புகளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...