rtjy 271 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கொள்கை

Share

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கொள்கை

அந்நிய கையிருப்பு இருப்பை பொறுத்து, அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதி கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளதாக மூத்த அரச அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாளொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திறைசேரி, மத்திய வங்கி, ஜனாதிபதி செயலகம் மற்றும் வாகன இறக்குமதியாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்று, இதற்கான கொள்கையொன்றை வகுத்து வருகின்றது.

எனினும் இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்க வேண்டும்.

பழைய வாகனங்களுக்கு அதிக உதிரி பாகங்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டும், அதன் மூலம் வெளிநாட்டு கையிருப்பு அதிகமாக வெளியேற்றுவதை கருத்தில் கொண்டும் இந்த கொள்கை வகுக்கப்படுகிறது.

இதன்படி, இரண்டு ஆண்டுகள் பழமையான வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த கொள்கையில் உள்ளடக்கப்படவுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட வகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதன்படி, 1000 சிசி மற்றும் 1300 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கு இந்த கொள்கையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இறக்குமதி காலம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அனுமதி, வெளிநாட்டு கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையான முடிவை எடுக்க வேண்டும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...