tamilni 283 scaled
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்!

Share

அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்த 10 இளைஞர்கள்: நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம்!

நவராத்திரி விழாவின் போது வீதிகளில் நடனமாடிக்கொண்டிருந்து 10 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தொடர்ந்து 24 மணித்தியாலம் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 10 பேரும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து 24 வயதுடைய ஒருவரும் மயங்கி விழுந்துள்ளார்.

பின் அடுத்தடுத்து 8 பேர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நவராத்திரி தொடங்கிய நாட்களில் இருந்து நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 2 மணிவரையில் 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன. ஆகவே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவில் இதுவரை மாரடைப்பால் இளைஞர்களும், சிறுவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், ஒரே நாளில் இத்தனை இளைஞர்கள் உயிரிழந்திருப்பது இந்தியாவையே உலுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...